நைஜீரியாவில் ஆயுத தாக்குதலில் 22 பேர் பலி; 14 பேர் காயம்

நைஜீரியாவின் மத்திய பகுதியில் நடந்த ஆயுத தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-08-15 00:31 GMT


அபுஜா,

நைஜீரியாவின் மத்திய பகுதியில் ஜோஸ் நார்த் என்ற பகுதியில் ருகுபா சாலையில் சென்ற 5 பேருந்துகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர்.  14 பேர் காயமடைந்து உள்ளனர்.  இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று 21 பேரை மீட்டனர்.  சந்தேகத்திற்குரிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்