வீட்டிலிருந்து பணிபுரியும் வசதி அடுத்தாண்டு வரை நீட்டிப்பு: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
கொரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை குகூள் அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது.
வாஷிங்டன்,
கொரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை குகூள் அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது.
இது குறித்து கூகுள் நிறுவன சி இ ஓ கூறுகையில், "உலகின் பல்வேறு பகுதிகளில் பல அலுவலகங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆயிரக்கணக்கான கூகுள் பணியாளர்கள் தாங்களாக அலுவலகத்திற்கு மீண்டும் வருவதை வரவேற்கிறோம்.
அலுவலகத்திற்கு வர விருப்பம் தெரிவிப்பவர்கள் 30 நாள்களுக்கு முன்பு தெரிவிக்க வேண்டும். அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அவர்களுக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும்” என்றார்.