தலீபான்களுடன் பாகிஸ்தானியர்கள் இருந்தனரா? பென்டகன் விளக்கம்
ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுடன் இணைந்து சண்டையிட பாகிஸ்தான் தனது ராணுவ வீரர்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தலீபான் பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.