துருக்கியில் 22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி

துருக்கியில் 22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

Update: 2021-09-11 22:37 GMT


அங்காரா,

துருக்கி நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இதனால் தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 66,36,899 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 259 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 643 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 30,144 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்