பிலிப்பைன்சில் 20,745 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
பிலிப்பைன்சில் 20,745 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
பிலிப்பைன்சில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,745 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
கடந்த சனிக்கிழமை அதிக அளவாக 26,303 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. இதுவரை தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,48,071 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 163 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,307 ஆக உயர்ந்துள்ளது.