ஆப்கானிஸ்தானில் பள்ளியில் குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் பள்ளி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2021-10-07 07:37 GMT
கோஸ்ட்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் கோஸ்ட் மாகாணத்தில் மதம் சார்ந்த ஒரு பள்ளி கூடமொன்று இயங்கி வருகிறது.  இந்த நிலையில், கையெறி குண்டு ஒன்று அந்த பள்ளியில் வெடிக்க செய்யப்பட்டு உள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.  15 பேர் காயமடைந்து உள்ளனர்.

கடந்த ஞாயிற்று கிழமை காபூலில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.  32 பேர் காயமடைந்து உள்ளனர்.  இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.

மேலும் செய்திகள்