சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் கடந்த ஒரிரு மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

Update: 2021-10-07 16:11 GMT
பீஜிங்,

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த ஒரிரு மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீன சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சீனாவில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் நேற்று 11 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இதுவரை கொரோனாவால் 4,636 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 96,335 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்