ஜப்பான் நிலநடுக்கம்; காயமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

ஜப்பானில் டோக்கியோ நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு காயமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2021-10-08 02:59 GMT
டோக்கியோ,


ஜப்பானில் டோக்கியோ நகரில் நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 6.1 ஆக பதிவானது என முதலில் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்பு 5.9 என குறைத்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலநடுக்கத்திற்கு 5 பேர் காயமடைந்து உள்ளனர் என்று முதற்கட்ட தகவல் தெரிவித்தது.  இந்நிலையில், காயமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்து உள்ளது என கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்