ஈரானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு

ஈரானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-10-16 13:59 GMT
தெஹ்ரான்,


ஈரான் நாட்டின் தென்கிழக்கே கெர்மன் மாகாணத்தில் யாஜ்தன்ஷார் பகுதியில் இன்று மாலை 3.16 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  எனினும், குடியிருப்பு பகுதிக்கு வெளியே நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  நிலநடுக்க மைய பகுதிக்கு அருகே உள்ள கிராமங்களுக்கு ஆய்வு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  அதன் முடிவுகளுக்கு ஏற்பவே சேத விவரங்கள் மதிப்பீடு செய்யப்படும்.

மேலும் செய்திகள்