இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை

இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்து உடலை சாலையில் வீசிச்சென்ற இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-18 23:55 GMT
லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் லெய்செண்டர் நகரில் இந்திய தம்பதிகளான காஷிஷ் அகர்வால் மற்றும் அவரது மனைவி கீதிகா கொயல் வசித்து வந்தனர். 29 வயதனான கீதிகா கொயலை கடந்த மார்ச் 3-ம் தேதி அவரது கணவர் காஷிஷ் அகர்வால் குத்திக்கொலை செய்துள்ளார். மனைவியை கொலை செய்த அகர்வால் அவரது உடலை உபிங்கம் கிளோஸ் என்ற பகுதியில் உள்ள சாலையோரம் வீசிச்சென்றுள்ளார்.

இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மார்ச் 6-ம் தேதி காஷிஷ் அகர்வாலை கைது செய்தனர். விசாரணையில் கீதிகாவை அவரது கணவர் அகர்வால் கொலை செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், மனைவி கீதாகா கொயலை அவரது கணவர் காஷிஷ் அகர்வால் கொடூரமாக குத்திக்கொலை செய்தது உறுதியானது. மனைவியை கொலை செய்த அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை ( குறைந்தது 20 ஆண்டுகள் 6 மாதங்கள்) விதித்து இங்கிலாந்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவாளி காஷிஷ் அகர்வால் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்