நைஜீரியாவில் மர்ம மனிதர்கள் துப்பாக்கி சூடு: 43 பேர் பலி

நைஜீரியாவில் உள்ள சகோடா மாகாணத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-10-19 06:26 GMT
சகோடா,

நைஜீரிய நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களும் ஆள் கடத்தலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சகோடா மாகாணத்தில் உள்ள கொரன்யா கிராமத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 43 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாகாண அரசு தெரிவித்து உள்ளது.

ஏற்கெனவே நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் சந்தைப் பகுதியை அடித்து நொறுக்கியதுடன் 30 பேரை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்