பாகிஸ்தான்: பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல் - 4 வீரர்கள் பலி
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
லாகூர்,
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள பஞ்பூர் மாவட்டம் ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது.
இந்நிலையில், பஞ்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் சென்றபோது சாலையோரம் மறைத்திருந்த வெடிகுண்டு வெடித்து சிறியது. இந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் சிதறியது.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 2 போலீசார், 2 ராணுவ வீரர்கள் என மொத்தம் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தலீபான்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.