ரஷியாவில் துப்பாக்கி குண்டு தொழிற்சாலையில் வெடி விபத்து -16 பேர் பலி

ரஷியாவில் துப்பாக்கி குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

Update: 2021-10-22 10:14 GMT
மாஸ்கோ, 

ரஷியாவில் துப்பாக்கி  குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. ரஷியாவின் ரைசான்  பிராந்தியத்தில் உள்ள அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 170- அவசர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கி குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. 

மேலும் செய்திகள்