மெக்சிகோ: போதைப்பொருள் கும்பல் மோதலில் 10 பேர் பலி!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது.

Update: 2022-01-07 06:30 GMT
கோப்புப்படம்
மெக்சிகோ,

மெக்சிகோவின் நகர் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 10 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

மெக்சிகோவில் உள்ள டவுன் ஹாலுக்கு வெளியே விடப்பட்டிருந்த வாகனத்தில் 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. கும்பல்கள் அடிக்கடி மோதிக்கொள்வதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

போதை பொருள் கும்பல் இடையே கடந்த நவம்பரில் நடந்த மோதலில், ஆறு பேரின் உடல்கள் ப்ரெஸ்னில்லோ நகரில் உள்ள ஒரு பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்