லண்டன்; வாளைக் கொண்டு பொதுமக்களை தாக்கிய நபர் கைது

லண்டனில் வாளைக் கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-04-30 10:35 GMT

லண்டன்,

கிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் கையில் வாள் ஒன்றை ஏந்திக்கொண்டு சுற்றித்திரிந்த நபர், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார். அந்த நபரை போலீசார் உடனடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், இதனால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்