அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்

அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-01-17 10:23 GMT
அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

டிரோன் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள 3 எரிபொருள் டேங்கர்கள் சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது. 

மேலும் செய்திகள்