மியான்மரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகபதிவு
மியான்மரில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகபதிவாகி உள்ளது.
நைபிடா,
மியான்மரில் இன்று காலை 7.56 மணியளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் யாங்கூனில் இருந்து 260 கிமீ சுற்றளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.