காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 16 பேர் பலி

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.

Update: 2024-05-23 21:21 GMT

கோப்புப்படம்

காசா,

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நீடித்து வரும்நிலையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள மசூதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

காசா முனையின் மேற்கு கரையில் எகிப்து எல்லையோரம் அமைந்துள்ள அல்-சக்ரா மசூதியில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து சதி தீட்டி வருவதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அந்த மசூதியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்களை அனுப்பியும் சரமாரி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டதாக அரபு நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்