துருக்கி நிலநடுக்கத்தின் செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு...!

துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள இஸ்லாஹியே, நுர்தாகி, டுஸிசி ஆகிய நகரங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

Update: 2023-02-08 11:16 GMT


Delete Edit

நிலநடுக்கத்திற்கு முன் துருக்கி நகரம்

நிலநடுக்கத்திற்கு பின் துருக்கி நகரம்

இஸ்தான்புல்

துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முந்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.

ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கியில் 7,108 பேரும், சிரியாவில் 2,530 பேரும் உயிரிழந்துள்ளனர், மொத்தம் 9,630 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

அரசு நடத்தும் ஏஜென்சியால் நடத்தப்பட்ட ஆய்வில் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை கஹ்ராமன்மாராஸ், காசியான்டெப், சன்லியுர்பா, தியர்பாகிர், அதானா, அதியமான், மாலத்யா, உஸ்மானியே, ஹடாய் மற்றும் கிலிஸ் என பட்டியலிட்டுள்ளது.

சிரியாவின் அலெப்போ, இட்லிப், ஹமா மற்றும் லதாகியா மாகாணங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கியில் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகளில் 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.


Delete Edit

நிலநடுக்கத்திற்கு முன் துருக்கி நகரம்

நிலநடுக்கத்திற்கு பின் துருக்கி நகரம்

கடந்த 36 மணி நேரத்தில், துருக்கியில் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகளில் 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதே பொதுப் பகுதியில் ஏற்படும் சிறிய நிலநடுக்கங்களே பின்அதிர்வுகள் ஆகும்.

4 ரிக்டர் அளவிலான பின்அதிர்வு பொதுவாக லேசானதாகக் கருதப்பட்டாலும், அது குறிப்பிடத்தக்க நடுக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சுவரில் விரிசல் போன்ற சிறிய சேதத்தை ஏற்படுத்தலாம். ரிக்டர்-5 நிலநடுக்கம், வரையறையின்படி, ரிக்டர்-4 ஐ விட 10 மடங்கு தீவிரமானது மற்றும் கட்டிடங்களுக்கு மிதமான சேதத்தை ஏற்படுத்தும்.


Delete Edit

நிலநடுக்கத்திற்கு முன் துருக்கி நகரம்

நிலநடுக்கத்திற்கு பின் துருக்கி நகரம்

ரிக்டர்-6 நிலநடுக்கம் வலுவானதாகக் கருதப்படுகிறது மற்றும் ரிக்டர்-4-ஐ விட 100 மடங்கு வலிமையானது. இந்த வகையான நிலநடுக்கம், குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், நிறைய சேதங்களை ஏற்படுத்தும்.

கடந்த 36 மணி நேரத்தில், தென்கிழக்கு துருக்கியில் குறைந்தபட்சம் 81 எண்ணிக்கையிலான 4 ரிக்டர் நிலநடுக்கங்கள், 20 எண்ணிக்கையிலான 5 ரிக்டர் நிலநடுக்கங்கள், மூன்று எண்ணிக்கையிலான 6 ரிக்டர் நிலநடுக்கங்கள் மற்றும் இரண்டு 7 ரிக்டர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

துருக்கியில் பூகம்ப அழிவின் அளவைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாக்ஸர் டெக்னாலஜீஸ் நிறுவனம் துருக்கியில் நிலநடுக்கத்துக்கு முன் மற்றும் பின் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிலநடுக்கத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.

துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள இஸ்லாஹியே, நுர்தாகி, டுஸிசி ஆகிய நகரங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

Delete Edit

நிலநடுக்கத்திற்கு முன் துருக்கி நகரம்

நிலநடுக்கத்திற்கு பின் துருக்கி நகரம்


Tags:    

மேலும் செய்திகள்