சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 11 பேர் பலி

ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2024-03-25 21:01 GMT

கோப்புப்படம் 

டமாஸ்கர்,

சிரியாவில் குடியிருப்பு பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை இழந்துவிட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள், அங்குள்ள பாலைவன பிரதேசத்தை தங்களின் மறைவிடங்களாக வைத்திருக்கின்றனர்.

அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தாக்குதல் நடத்தி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களையும், பாதுகாப்பு படையினரையும் கடத்தியும் சென்று வருகின்றனர்.

மேலும் பாலைவனப்பகுதியில் வளரும் விலை உயர்ந்த காளான் மற்றும் உணவுப்பொருட்களை சேகரிக்க செல்லும் மக்கள் மீதும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் வடக்கு சிரியாவின் பாலைவனப்பகுதியில் மேற்படி உணவுப்பொருட்களை சேகரிப்பதற்காக நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் வாகனம் ஒன்றில் சென்றனர்.

இந்த வாகனம் அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறியது. அந்த நேரத்தில் அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகளும் அந்த வாகனத்தில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்