இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு 24 மணி நேர அவசரகால உதவிக்கு உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

Update: 2023-10-11 10:29 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது.

காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது. இதுவரை இஸ்ரேல் மக்கள் 900 பேரும், பாலஸ்தீனிய மக்கள் 770 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிலவரம் குறித்து கூறியுள்ளார். இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும், வெளியுறவு துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு 24 மணி நேர அவசரகால உதவிக்கு உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. 972-35226748, 972-543278392 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்தியர்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்