ரஷிய ராணுவ சரக்கு விமானம் விபத்து; பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

ரஷிய ராணுவ சரக்கு விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-06-24 11:10 GMT

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா 121-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர்.

இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு ரஷியாவின் ரியாசன் மகாணத்தில் 9 பேருடன் பயணித்த இலியுஷின் Il-76 ரக ராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விமானம் உக்ரைன் போருக்கு ரஷியாவில் இருந்து ஆயுதங்களை கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

தரையிறங்கும்போது ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்