திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2024-05-25 23:41 GMT

திருமலை,

கோடை விடுமுறையையொட்டி வார இறுதி நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அந்தக் கூட்டம் திருமலையில் வெளிவட்ட சாலையில் உள்ள சிலாத்தோரணம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் வரை காணப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக ஆக்டோபஸ் பவனில் இருந்து சீலாத் தோரணம் வரை 8 சிறப்புப் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒவ்வொரு நிமிடமும் பக்தர்களை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தரிசன வரிசைகளில் நெரிசல் ஏற்படாமல் இருக்க திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை ஊழியர்கள் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கோவிலில் 46 ஆயிரத்து 486 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் பக்தர்கள் வழிபட 30 மணி நேரம் ஆகிறது. இதுதவிர அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு நடைபாதைகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜூன் மாதம் 30-ந்தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 

 

Tags:    

மேலும் செய்திகள்