20 ஓவர் கிரிக்கெட் தெற்கு மண்டல அணி தோல்வி

சையது முஷ்தாக் அலி கோப்பைக்கான மண்டலங்களுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது.

Update: 2017-02-15 21:52 GMT

மும்பை,

சையது முஷ்தாக் அலி கோப்பைக்கான மண்டலங்களுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் வினய்குமார் தலைமையிலான தெற்கு மண்டல அணி, மனோஜ் திவாரி தலைமையிலான கிழக்கு மண்டல அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய தெற்கு மண்டல அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 72 ரன்னும், கேப்டன் வினய்குமார் 68 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய கிழக்கு மண்டல அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷாங் ஜக்கி 90 ரன்கள் சேர்த்தார். கிழக்கு மண்டல அணி தொடர்ந்து 2–வது வெற்றியை ருசித்தது. தெற்கு மண்டல அணி 2–வது தோல்வியை சந்தித்தது.

வடக்கு மண்டல அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய மத்திய மண்டல அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மகேஷ் ரவாத் ஆட்டம் இழக்காமல் 57 ரன்னும், கேப்டன் நமன் ஓஜா 48 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய வடக்கு மண்டல அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களே எடுத்தது. இதனால் மத்திய மண்டல அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 37 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

மேலும் செய்திகள்