அடடா! என்ன ஒரு அழகான இடம் ; விசாகப்பட்டினத்தை காட்டும் செல்பி எடுத்து வெளியிட்ட விராட் கோலி

அடடா! என்ன ஒரு அழகான இடம். விராட் கோலி வியந்து விசாகப்பட்டினத்தை காட்டும் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.

Update: 2018-10-24 10:04 GMT
விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், என்ன ஒரு அழகான இடம் என விசாகப்பட்டினத்தின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, விசாகப்பட்டினத்தை காட்டும் செல்பி புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘என்ன ஒரு அதிர்ச்சி தரும் இடம். அன்பு விசாக்கிற்கு வருகிறது’ என விசாகப்பட்டினத்தை வியந்தபடி குறிப்பிட்டுள்ளார். கோலியின் இந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

மேலும் செய்திகள்