இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு, பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-08 22:30 GMT
லாகூர்,

ஆஸ்திரேலிய மண்ணில், முதல் முறையாக டெஸ்ட் தொடரை வசப்படுத்தி புதிய சகாப்தம் படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையை படைத்த இந்திய அணிக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்