இரானி கோப்பை கிரிக்கெட்: விதர்பா அணி நிதான ஆட்டம்

ரஞ்சி சாம்பியன் விதர்பா – ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

Update: 2019-02-13 21:30 GMT

நாக்பூர், 

ரஞ்சி சாம்பியன் விதர்பா – ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் 2–வது நாளான நேற்று தனது முதல் இன்னிங்சை நிதானமாக ஆடிய விதர்பா அணி ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்துள்ளது. சஞ்சய் (65 ரன்), விக்கெட் கீப்பர் அக்‌ஷய் வாட்கர் (50 ரன், நாட்–அவுட்) அரைசதம் அடித்தனர். இன்று 3–வது நாள் ஆட்டம் நடைபெறும்.

மேலும் செய்திகள்