ஐ.பி.எல். போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
டெல்லி,
ஐ.பி.எல். போட்டியின் இன்று நடைபெறும் 53வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் கோபால், சொதி மற்றும் கவுதம் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். டெல்லி அணியில் அமித் மிஷ்ரா என்ற ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.