கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார், விஜய்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளார்.

Update: 2019-08-22 22:22 GMT
லண்டன், 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். அங்குள்ள சோமர்செட் அணி நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழக கிரிக்கெட் சங்கம் ஒப்புதல் அளித்ததும் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார். அவர் ஆடுவது உறுதி செய்யப்பட்டால் இந்த கவுண்டி சாம்பியன்ஷிப்பில் எஞ்சிய 3 ஆட்டங்களில் களம் இறங்குவார்.

மேலும் செய்திகள்