20 ஓவர் கிரிக்கெட்: காஞ்சீபுரம் அணி வெற்றி

திண்டுக்கல் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், காஞ்சீபுரம் அணி வெற்றிபெற்றது.

Update: 2020-01-21 23:26 GMT
சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் எஸ்.எஸ்.ராஜன் கோப்பைக்கான மாவட்டங்களுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் திண்டுக்கல்லில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் காஞ்சீபுரம்-திண்டுக்கல் மாவட்ட அணிகள் மோதின. முதலில் ஆடிய காஞ்சீபுரம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அருண் 70 ரன்கள் சேர்த்தார். பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களே எடுத்தது. இதனால் காஞ்சீபுரம் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காஞ்சீபுரம் அணி வீரர் ஆஷிஷ்குமார் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் சேலம், நீலகிரி, தேனி, வேலூர், திருவாரூர், ஈரோடு, நாமக்கல், கோவை, கன்னியாகுமரி, மதுரை, கிருஷ்ணகிரி மாவட்ட அணிகள் வெற்றி பெற்றன.

மேலும் செய்திகள்