5 ஆயிரம் பேருக்கு ஒரு மாத உணவுப்பொருள் வழங்கும் தெண்டுல்கர்

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 5 ஆயிரம் பேரின் ஒரு மாதத்துக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் செலவை சச்சின் டெண்டுல்கர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

Update: 2020-04-11 00:31 GMT
மும்பை, 

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட ஏற்கனவே ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். 

தற்போது ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 5 ஆயிரம் பேரின் ஒரு மாதத்துக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். மும்பை சிவாஜி நகர், கோவந்தி பகுதியில் உள்ள ஏழைகளுக்கு அப்னாலயா தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இதை வழங்குகிறார்.

மேலும் செய்திகள்