ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 143-ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணையித்துள்ளது.

Update: 2020-09-26 15:59 GMT
அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீசியது. ஐதராபாத் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 142-ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணிக்கு 143-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்