37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு

அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2021-01-14 16:48 GMT
மும்பை

மும்பையில் நேற்று நடைபெற்ற முஷ்டாக் அலி டிராபியில் கேரளா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. அதிரடியாக விளையாடிய கேரள வீரர் முகமது அசாருதீன் 37 பந்துகளில் சதம் அடித்து, டி-20 போட்டிகளில் விரைவாக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்று பெருமையை பெற்றார். சிறப்பாக விளையாடி சதம் அடித்த கேரளா வீரர் முகமது அசாருதீனுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.             

மேலும் செய்திகள்