இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றது

இந்திய கிரிக்கெட் அணி நேற்று தனி விமானம் மூலம் இலங்கையில் உள்ள கொழும்பு நகருக்கு போய் சேர்ந்தது.

Update: 2021-06-28 23:20 GMT
கொழும்பு, 

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்று இருப்பதால், ஷிகர் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக மும்பையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் இலங்கையில் உள்ள கொழும்பு நகருக்கு போய் சேர்ந்தது. இந்திய அணியினர் ஓட்டல் அறையில் 3 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிப்பார்கள். அவர்கள் வருகிற 2-ந் தேதி முதல் பயிற்சியை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை-இந்தியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஜூலை 13-ந் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்