துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க கோலி பரிந்துரைத்தாரா?

விராட் கோலி, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக நேற்று கூறினார்

Update: 2021-09-17 15:00 GMT

இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார்.  இந்த நிலையில், ரோகித் சர்மாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என விராட் கோலி விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் சர்மாவுக்கு வயது அதிகமாகி விட்டதால் அந்த பொறுப்பிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என  விராட் கோலி, அணித் தேர்வாளர்களிடம் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது.

ஒருநாள் அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து கே.எல்.ராகுல் ஒருநாள் அணிக்குத் துணை கேப்டனாகவும், ரிஷப் பண்ட் டி20 அணிக்கு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று கோலி, தேர்வாளர்களுக்கு ஆலோசனை கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்