ஐ.பி.எல்.சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்,
டெல்லி.
டெல்லியில் படர்பூரில் உள்ள மோலர்பாண்ட் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு குடியிருப்பில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு மடிக்கணினிகள், 13 மொபைல் போன்கள், ஒரு தொலைக்காட்சி பெட்டி மற்றும் ரூ.52,000 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.