தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய வீரர்களை நாடவில்லை - ஜெய்ஷா

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய வீரர்களை நாடவில்லை என ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2024-05-24 11:34 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. இப்போதே தொடங்கி உள்ளது. இதற்காக பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், ஸ்டீபன் பிளெமிங், விவிஎஸ் லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர், ஆசிஸ் நெஹ்ரா போன்ற முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரி எந்தவொரு ஆஸ்திரேலிய வீரர்களிடமும் கோரிக்கை வைக்கவில்லை என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்