5-வது முறையாக "சாம்பியன்" பட்டம் வென்ற சென்னை..! கவுதம் கம்பீர் வாழ்த்து

அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை சாதனையை சென்னை சமன் செய்தது

Update: 2023-05-30 06:25 GMT

அகமதாபாத் ,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்வது இது 5-வது முறையாகும். இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது. ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அணிக்கு முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துக்கள். ! 1 ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம். 5 கோப்பையை வெல்வது நம்பமுடியாதது. என தெரிவித்துள்ளார்.

கம்பீர் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி ஆலோசராக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்