உலகக்கோப்பை கிரிக்கெட்; மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்..!!

உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து இடையிலான ஆட்டத்தில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-10-17 08:11 GMT

image courtesy; twitter/ @ICC

தர்மசாலா,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இதில் இன்று நடைபெற உள்ள 15-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்