உருகுவே கால்பந்து கிளப்பில் இணைந்த மணிப்பூர் வீரர்

லத்தீன் அமெரிக்க கிளப்புடன் ஒப்பந்தமான முதல் இந்திய கால்பந்து வீரர் என்ற சிறப்பை பிஜாய் சேத்ரி பெற்றுள்ளார்.

Update: 2024-03-27 21:36 GMT

சென்னை,

இந்திய கால்பந்து வீரரும், ஐ.எஸ்.எல். தொடரில் சென்னையின் எப்.சி. அணிக்காக விளையாடுபவருமான பிஜாய் சேத்ரியை இந்த ஆண்டு இறுதிவரை உருகுவே நாட்டில் உள்ள கால்பந்து கிளப்பான காலன் எப்.சி. வாங்கியுள்ளது. பின்கள வீரரான சேத்ரி, மணிப்பூரை சேர்ந்தவர் ஆவார்.

இதன் மூலம் அவர் லத்தீன் அமெரிக்க கிளப்புடன் ஒப்பந்தமான முதல் இந்திய கால்பந்து வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். காலன் கிளப் விரும்பினால், அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்