ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய எப்.சி.கோவா

மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை சிட்டி அணிகள் நேரடியாக அரையிறுதி சுற்றை எட்டின.

Update: 2024-04-20 16:11 GMT

Image Courtesy: @IndSuperLeague / @FCGoaOfficial

கோவா,

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் பங்கேற்ற 12 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை சிட்டி அணிகள் நேரடியாக அரையிறுதி சுற்றை எட்டியது.

3 முதல் 6-வது இடத்தை பெற்ற எப்.சி. கோவா, ஒடிசா எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், சென்னையின் எப்.சி அணிகள் பிடித்தன. இந்த அணிகள் நாக்-அவுட் சுற்றில் மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற நாக் -அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் கேரளா அணியை வீழ்த்தி ஒடிசா அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த நிலையில் கோவாவில் இன்று நடைபெற்ற 2வது நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் எப்.சி. கோவா - சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி எப்.சி கோவா அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி ஆட்டங்களில் ஒடிசா - மோகன் பகான், மும்பை சிட்டி - கோவா அணிகள் மோத உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்