ஆசிய பேட்மிண்டன் போட்டி சாய்னா, பிரனாய் அரைஇறுதிக்கு முன்னேற்றம் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள வுஹான் நகரில் நடந்து வருகிறது.

Update: 2018-04-27 21:00 GMT

வுஹான், 

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள வுஹான் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–15, 21–13 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் லீ ஜாங் மியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 43 நிமிடம் தேவைப்பட்டது. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 19–21, 10–21 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் சுங் ஜி ஹூயுனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 18–21, 23–21, 21–12 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 1 மணி 12 நிமிடம் நீடித்தது. மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 12–21, 15–21 என்ற நேர்செட்டில் மலேசியாவின் லீ ஷோங் வெயிடம் வீழ்ந்து நடையை கட்டினார்.

மேலும் செய்திகள்