புரோ கபடி: பெங்கால்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ் (பி பிரிவு) அணிகள் மல்லுக்கட்டின. இந்த ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது.

Update: 2018-10-20 22:00 GMT
12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ் (பி பிரிவு) அணிகள் மல்லுக்கட்டின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் சேர்த்தன. முதல் பாதியில் 18-15 என்ற கணக்கில் முன்னிலை வகித்த உ.பி.யோத்தா அணியால் கடைசி வரை அந்த முன்னிலையை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. மற்றொரு திரிலிங்கான ஆட்டத்தில் புனேரி பால்டன் 33-32 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் யு மும்பா அணியை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது.

மேலும் செய்திகள்