இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சாங்க்வான் ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கினார்

இந்திய குத்துச்சண்டை வீரரும், தேசிய சாம்பியனுமான சுமித் சாங்க்வான் ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கியுள்ளார்.

Update: 2019-12-11 23:24 GMT

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. 3-2 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி.யை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணியை சந்திக்கிறது.

* தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான இயக்குனராக முன்னாள் கேப்டன் 38 வயதான கிரேமி சுமித் நேற்று நியமிக்கப்பட்டார். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 3 மாதங்களுக்கு மட்டுமே இந்த பொறுப்பில் இருக்க சம்மதித்துள்ள சுமித் உடனடியாக தனது பணிகளை தொடங்கி இருக்கிறார்.

* இந்திய குத்துச்சண்டை வீரரும், தேசிய சாம்பியனுமான சுமித் சாங்க்வான் ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கியுள்ளார்.

மேலும் செய்திகள்