உலகக்கோப்பை வில்வித்தை: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்

இறுதிப்போட்டியில் தீபிகா குமாரி,கிம் சிஹ்யோனிடம் மோதினார்.

Update: 2024-04-28 11:35 GMT

Image : AFP 

பெய்ஜிங் ,

சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் மகளிா் தனிநபா் பிரிவு அரையிறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தீபிகா குமாரி , தென்கொரியாவின் நாம் சுஹ்யோன், கிம் சிஹ்யோன் மற்றும் சீனாவின் லீ ஜியாமன் ஆகிய 4 பேர் தகுதிபெற்றனர்.

இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபிகா குமாரி, தென்கொரியாவின் நாம் சுஹ்யோனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் தீபிகா குமாரி, தென்கொரியாவின் கிம் சிஹ்யோனிடம் மோதினார். இதில் 0-6 என்ற புள்ளி கணக்கில் தீபிகா குமாரி தோல்வி அடைந்தார். இதனால் இரண்டாம் இடம் பிடித்த தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்