ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் பி.வி. சிந்து , பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

லக்சயா சென் , கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2வது சுற்றில் தோல்வி அடைந்தனர்.

Update: 2024-04-10 22:13 GMT

நிங்போ,

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின்2வது சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி. சிந்து (இந்தியா) , சீனாவின் ஹான் யுவுடன் மோதினார் .பரபரப்பான இந்த ஆட்டத்தில் 18-21, 21-14,21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பி.வி. சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது ஆட்டம் ஒன்றில்  இந்தியாவின் ஹெச்.எஸ். பிரனாய் , சீனாவின் லு குவாங்-ஐ எதிர்கொண்டார் . இதில் 17-21, 23-21, 23-21 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று ஹெச்.எஸ். பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் இந்திய வீரர்களான லக்சயா சென் , கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

Tags:    

மேலும் செய்திகள்