ஏகான் சாம்பியன்சிப் ரோகன் போபண்ணா- இவான் டோடிக் ஜோடி தோல்வி

ஏகான் சாம்பியன்சிப் அரையிறுதி போட்டியில் ரோகன் போபண்ணா- இவான் டோடிக் ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது

Update: 2017-06-24 07:03 GMT
லண்டன்,

ஏகான் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டிகள் பிரட்டன் தலைநகரான இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் ஆண்கள் இரட்டையர் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி பிரான்ஸின் ஜூலியன் பென்னெட்டியு- எட்வர்ட் வசெல்லி ஜோடியை எதிர்கொண்டது.

இப்போட்டியின் முதல் செட்டில் பிரான்ஸ் ஜோடி 6-4 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரான்ஸ் ஜோடி இரண்டாவது செட்டிலும் 7-5 என்ற புள்ளிகள் பெற்று எளிதாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸின் ஜூலியன் பென்னெட்டியு- எட்வர்ட் வசெல்லி ஜோடி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்