சர்வதேச டென்னிஸ் போட்டி இந்திய வீரர் சசிகுமார் ‘சாம்பியன்’

பவர்பாக் டென்னிஸ் அகாடமி சார்பில் நீதிபதி பி.எஸ்.கைலாசம் நினைவு சர்வதேச ஆண்கள் பியூச்சர்ஸ் டென்னிஸ் போட்டி சென்னை தரமணியில் நடந்தது.

Update: 2017-09-16 20:58 GMT

சென்னை,

பவர்பாக் டென்னிஸ் அகாடமி சார்பில் நீதிபதி பி.எஸ்.கைலாசம் நினைவு சர்வதேச ஆண்கள் பியூச்சர்ஸ் டென்னிஸ் போட்டி சென்னை தரமணியில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சசிகுமார் முகுந்த் 4–6, 6–3, 6–3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்து வீரர் காலின் வான் பீமை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். 20 வயதான சசிகுமார் முகுந்த் சென்னையை சேர்ந்தவர் ஆவார். பரிசளிப்பு விழாவில் போட்டி அமைப்பாளர் டாக்டர் சடயவேல் கைலாசம் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

மேலும் செய்திகள்