சேலஞ்சர் டென்னிஸ் லியாண்டர் பெயஸ்-புரவ் ராஜா ஜோடி ‘சாம்பியன்’

சேலஞ்சர் டென்னிஸ் லியாண்டர் பெயஸ்-புரவ் ராஜா ஜோடி கைப்பற்றிய முதல் ‘சாம்பியன்’ பட்டம் ஆகும்.

Update: 2017-11-13 22:30 GMT
நோஸ்விலே,

ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள நோஸ்விலேவில் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-புரவ் ராஜா ஜோடி, ஜேம்ஸ் செர்ராடானி (அமெரிக்கா)-ஜான் பாட்ரிக் சுமித் (ஆஸ்திரேலியா) இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ்-புரவ் ராஜா இணை 7-6 (7-4), 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஜேம்ஸ் செர்ராடானி-ஜான் பாட்ரிக் சுமித் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் புரவ் ராஜாவுடன் இணைந்த பிறகு லியாண்டர் பெயஸ் கைப்பற்றிய முதல் பட்டம் இதுவாகும்.

மேலும் செய்திகள்