மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வி

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வியடைந்தார்.

Update: 2018-12-31 22:15 GMT
புனே,

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் களம் இறங்கிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மைக்கேல் மோவிடம் தோற்று வெளியேறினார். குணேஸ்வரனின் சவால் 1 மணி 14 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்டீவ் டார்சிஸ் (பெல்ஜியம்) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ராபர்ட்டா கார்பலெசை (ஸ்பெயின்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் புராவ் ராஜா-ராம்குமார், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்- அமெரிக்காவின் நிகோலஸ் மோன்ரோ ஆகிய ஜோடிகள் தங்களது முதல் சுற்றில் தோற்று ஏமாற்றம் அளித்தன.

மேலும் செய்திகள்